கபிலர்மலை அருகேயுள்ள திடுமல் கவுண்டம்பாளையத்தில் உள்ள சக்தி விநாயகர்,மகா மாரியம்மன்,பகவதி அம்மன், பொம்மி,வெள்ளையம்மாள் சமேத மதுரைவீரன், கருப்பணார் ஆகிய தெய்வங்களின் கோபுரக் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 20) நடைபெறுகிறது.
இதையொட்டி, புதன்கிழமை காலை முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. இதன்பின்னர், வியாழக்கிழமை காலை 7.30 மணி முதல் 8 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.