மல்லசமுத்திரம் வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) மாதேஸ்வரி தலைமை வகித்தார்.ஒருங்கிணைப்பாளர் முருகேசன் வரவேற்றார். இதில், மாணவர்களுக்கு உதவி உபகரணங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் கெளரி, கோபாலகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழங்கினர்.
சிறப்பு பயிற்றுநர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.