நுண்ணீர் பாசனத் திட்ட விழிப்புணர்வு முகாம்

திருச்செங்கோடு வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின்  கீழ் செயல்படுத்தப்படும்

திருச்செங்கோடு வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின்  கீழ் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனத் திட்டம்  குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் ஏமப்பள்ளி கிராமத்தில்  புதன்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமணி கலந்துகொண்டு வட்டாரத்துக்கு 2019- 20 ஆம் ஆண்டுக்கு பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 318 ஹெக்டர் இலக்கு குறித்தும், சொட்டுநீர் பாசனம் தெளிப்புநீர் பாசனம் மற்றும் மலை தூவான் கருவிகள் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுவது குறித்தும் கூறினார்.
இந்தத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற நுண்ணீர் பாசனம் அமைத்திட கணினி சிட்டா, இரண்டு  புகைப்படம், அடங்கல்,  நிலவரைபடம், ஆதார் அட்டை, சிறு குறு விவசாயி சான்று, ஸ்மார்ட் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வந்து பதிவு செய்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த முகாமில் நெட்டாபார்ம் நிறுவனத்தினர்   நுண்ணீர் பாசனம் குறித்து செய்முறை  விளக்கம் அளித்தனர். இந்த முகாமில் ஏமப்பள்ளி சிக்க நாயக்கன்பாளையம் மற்றும் பட்லூர் கிராமங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியை உதவி  வேளாண்மை அலுவலர்கள் சுப்பிரமணி, வடிவேல், தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com