நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்
By DIN | Published On : 25th June 2019 09:44 AM | Last Updated : 25th June 2019 09:44 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 26) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து உரிய நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.