மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை புரிந்தவர்கள்விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை புரிந்தவர்கள், தமிழக அரசின் விருதுகள் பெற

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை புரிந்தவர்கள், தமிழக அரசின் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்
கூறியிருப்பது;-
2019-ஆம் ஆண்டுக்கான சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15-இல் கொண்டாடப்படுகிறது.  நாமக்கல் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, சிறப்பாகச் சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. 
தகுதியான நபர்கள் இருப்பின் விண்ணப்பிக்கலாம். முதல்வர் விருது வழங்கி கௌரவிக்க உள்ளதால், மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை புரிந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், வேலைவாய்ப்பு அளித்த நிறுவனம், சமூகப் பணியாளர் மற்றும் சிறந்த மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்களை வரும் ஜூலை 3-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com