பரமத்தி அருகே இளம்பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து பரமத்தி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி அருகே பொன்னேரிபட்டியில் கோழிப் பண்ணை ஒன்றில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர ஷாலி என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவருடன் இவரது மகள் ஆஷாவும் (20) கோழிப் பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந் நிலையில் சனிக்கிழமை பிற்பகல் ஆஷா, வீட்டில் உள்ள தூக்கிட்டு இறந்து கிடந்தார். தகவலின்பேரில் பரமத்தி போலீஸார் அங்கு சென்று ஆஷாவின் உடலை மீட்டு கொலையா?, தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.