பரமத்தி வேலூர் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை பூச்சாட்டு விழா நடைபெற்றது.
இக்கோயில் திருத்தேர் பெருவிழா ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வேலூர் நண்பர்கள் குழு சார்பில் பூச்சாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 8 பட்டியைச் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் பூக்களுடன் கோயிலை வந்தடைந்தனர். பின்னர் மகா மாரியம்மனுக்கு பூச்சாட்டி, பூக்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை வேலூர் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.