பரமத்தி வேலூர் அருகே உள்ள கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இப்பள்ளியில் முறையே 485, 479, 478 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 29 பேரும், 400-க்கு மேல் 52 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப் பள்ளி மாணவர்கள் தமிழில் 98, ஆங்கிலத்தில் 98, கணிதத்தில் 98, அறிவியலில் 98, சமூக அறிவியலில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பள்ளியின் தாளாளர் சண்முகசுந்தரம், இயக்குநர்கள் சிவா, வித்யா, முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.