ராசிபுரம் நகர, ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காரல் மார்க்ஸின் 201 -ஆ வது பிறந்த தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலர் எஸ்.மணிமாறன் தலைமை வகித்தார். பழைய பஸ் நிலையம் முன்பாக நடைபெற்ற விழாவில், காரல் மார்க்ஸ் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.ராஜா, நாமகிரிப்பேட்டை ஒன்றிய பொறுப்பாளர் என்.செந்தில்குமார், மாதர் சங்க மாவட்டச் செயலர் எஸ்.மீனா, எஸ்.பானுமதி, பி.ஆர்.செங்கோட்டுவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.