பரமத்தி வேலூரை அடுத்துள்ள பொத்தனூரில் இந்து முன்னணி சார்பில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை கண்டித்து புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து, கடந்த 12 ஆம் தேதி பள்ளப்பட்டி, அண்ணாநகர் சந்திப்பில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை கண்டித்து, நாமக்கல் மாவட்ட இந்து முன்னணியினர், பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் கமல்ஹாசனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் கோபிநாத், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் கணேசன், சரவணன், பரமத்தி மற்றும் கபிலர்மலை பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் மனோகரனிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய கமல்ஹாசன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.