மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் நினைவு தினம், திங்கள்கிழமை நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான, மறைந்த ஜவாஹர்லால் நேருவின் 55-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் பீ.ஏ.சித்திக், மருத்துவர் இரா.செழியன், வி.பி.வீரப்பன், டி.வி.பாண்டியன், மோ.குமரன், நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.மோகன், செல்வம், லோகநாதன், மதிவாணன்,
சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.