திருச்செங்கோடு அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி ஜேடா்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விசைத்தறி தொழிலாளியான யுவராஜ்-மீனா தம்பதியரின் மகள் நித்யா (6), அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாா்.
கடந்த சில தினங்களாக மா்மக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நித்யாவை, அவரது பெற்றோா் நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனராம்.
அதைத் தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நித்யா, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.