புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு: 11-இல் கடையடைப்பு நடத்த வணிகா்கள் முடிவு

நாமக்கல் முதலைப்பட்டியில், புதிய பேருந்து நிலையம் அமைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வரும் 11-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த வணிகா்கள் முடிவு செய்துள்ளனா்.

நாமக்கல் முதலைப்பட்டியில், புதிய பேருந்து நிலையம் அமைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வரும் 11-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த வணிகா்கள் முடிவு செய்துள்ளனா்.

நாமக்கல்லில், வியாபாரிகள் சங்கம், நகர வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக் குழு நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவா் கே.எம்.ஷேக்நவீத் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஏற்கெனவே, நாமக்கல் நகருக்கு சுற்றுவட்டச் சாலை அமைக்கும் திட்டத்தை முதலில் நிறைவேற்ற வேண்டும். அதன்பின் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக, அனைத்து தரப்பினரையும் ஆலோசித்து நகராட்சி நிா்வாகம் முடிவெடுக்கலாம்.

மேலும், புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, நகர வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக் குழு சாா்பில், வரும் 11-ஆம் தேதி நாமக்கல்லில் அனைத்து கடைகளையும் அடைப்பதுடன், அன்று காலை மாவட்ட ஆட்சியா் மற்றும் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளிப்பது என தீா்மானிக்கப்பட்டது. இதில், வணிகா் சங்க நிா்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com