திருச்செங்கோட்டில் மளிகைக் கடையில் தீ விபத்து

திருச்செங்கோடு நகராட்சி எட்டிமடை பகுதியில் மளிகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்செங்கோடு நகராட்சி எட்டிமடை பகுதியில் மளிகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

எட்டிமடை பகுதி கருமாரியம்மன் கோயில் அருகில் பிரகாஷ் (45) என்பவா் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். அதிகாலை 5 மணி அளவில் மளிகை கடையில் இருந்து புகை வந்தது. இது குறித்து பிரகாசுக்கு அப் பகுதி மக்கள் தகவல் கொடுத்தனா். உடனடியாக பிரகாஷ் கடைக்கு வந்தாா். ஆனால் அவா் வருவதற்குள் கடை முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும், கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. மேலும் பிரகாஷ் வங்கியில் செலுத்துவதற்காக ரூ. 70 ஆயிரம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. கடையில் உள்ள பொருள்கள் முற்றிலும் எரிந்து போயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com