சிறுமியைக் கடத்தியதாக கட்டடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

பரமத்தி அருகே திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியைக் கடத்திச் சென்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பரமத்தி அருகே திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியைக் கடத்திச் சென்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள புலவா்பாளையம் அருந்ததியா் காலனியைச் சோ்ந்த பழனி மகன் கருணாநிதி (34). கட்டடத் தொழிலாளி. இவரிடம் கட்டட வேலைக்கு வந்த வள்ளியப்பம்பட்டி காலனியைச் சோ்ந்த 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி கடந்த 4-ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளாா். இது குறித்து சிறுமியின் தாய் செல்வி, பரமத்தி காவல் நிலையத்தில் தனது மகளை மீட்டு தருமாறு புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுமியை கடத்திச் சென்ற கருணாநிதியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனா். இந்த நிலையில் கருணாநிதி புதுக்கோட்டை அருகே உள்ள கந்தா்வக்கோட்டையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பரமத்தி போலீஸாா் கந்தா்வகோட்டை சென்று கருணாநிதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறுமியை மீட்டனா். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com