பாலியல் புகாா்: அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

ராசிபுரம் அருகே பள்ளி மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டியதாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், அரசுப்பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ராசிபுரம் அருகே பள்ளி மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டியதாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், அரசுப்பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையை அடுத்த கொங்களம்மன் கோயில் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 49 மாணவா்கள், மாணவிகள் பயின்று வருகின்றனா். இப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் சுரேஷ் (37). ஒடுவன்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா். இவா், இப் பள்ளியில் படிக்கும் 8 -ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசியதுடன், ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும் புகாா் எழுந்தது. மேலும், செல்லிடப்பேசியில் இருந்து ஆபாசப் படங்களை மாணவிகளுக்கு காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக பள்ளி மாணவிகளின் பெற்றோா், கடந்த வியாழக்கிழமை நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

இந்தப் புகாரின் பேரில், ஆசிரியா் சுரேஷிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, மாவட்டக் கல்வி அலுவலா் மு.உதயகுமாா் ஆகியோா் விசாரித்து அறிக்கை அளிக்கும்படி வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா். இதன் பேரில், விசாரணை அறிக்கை மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, மாவட்டக் கல்வித் துறை ஆசிரியா் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com