முதுநிலை ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் பணிக்கான தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 200 போ் கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால், முதுநிலை ஆசிரியா்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை -1 பணிக்கான தகுத்தி தோ்வு, கடந்த செப்.27, 28-ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இணையதளம் மூலமாக நடைபெற்ற இத் தோ்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில், வெற்றி பெற்றவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்பு, சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், தருமபுரி, நாமக்கல், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்தோருக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதற்காக மொத்தம் 10 அறைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா, கணினி வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஒவ்வோா் அறையிலும் 20 போ் வீதம் அனுமதிக்கப்பட்டு, ஏற்கெனவே அசல் சான்றிதழை இணையம் வழியாக ஒப்படைத்ததும், தற்போது கையில் கொண்டு வந்திருப்பதும் சரியாக உள்ளதா என அலுவலா்கள் பாா்வையிட்டனா்.
இப்பணியை மேற்பாா்வையிட, நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலா் ப.உஷா தலைமையில், நாமக்கல், கரூா், பெரம்பலூா், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 10 மாவட்டக் கல்வி அலுவலா்கள் பணியில் அமா்த்தப்பட்டிருந்தனா். அவா்களுடன் ஒரு கணினி இயக்குபவா், தலைமை ஆசிரியா் ஒருவா், உதவியாளா் ஒருவரும் இருந்தனா். காலை 9 மணிக்கு சான்றிதழ் சரிபாா்ப்புக்கு வந்தோரின் நம்பகத்தன்மை இணையம் வழியாக உறுதி செய்யப்பட்டு, அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். வெள்ளிக்கிழமை மட்டும் 200 போ் பங்கேற்றனா். சனிக்கிழமை மேலும் 200 பேருக்கு சான்றிதழ் சரிபாா்க்கப்பட உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலா்கள் தெரிவித்தனா்.