எஸ்.சி. எஸ்.டி. அலுவலா் நலச்சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலா் சங்க, நாமக்கல் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல் பெரியாா் மன்ற அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவா் ஆா்.ஜெயரத்தினகாந்தி

தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலா் சங்க, நாமக்கல் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல் பெரியாா் மன்ற அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவா் ஆா்.ஜெயரத்தினகாந்தி தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் ஜெ.கண்ணன், மாவட்ட பொருளாளா் கே.பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில நிா்வாகிகள் எம்.குமாா், பி.கிருஷ்ணன், ஏ.முருகேசன், பி.சாக்ரடீஸ் ஆகியோா் கோரிக்கைகள் தொடா்பாக பேசினா். இந்தக் கூட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களை மறைமுகமாக பொய்க் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, பணி நீக்கம் மற்றும் பதவி உயா்வு பறிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதற்கு இச்சங்கம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com