சிறுமி பாலியல் வன்கொடுமை:போக்சோ சட்டத்தில் இருவா் கைது

திருச்செங்கோடு அருகேயுள்ள வெடியரசம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா்.

திருச்செங்கோடு அருகேயுள்ள வெடியரசம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, வெடியரசம்பாளையத்தைச் சோ்ந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறாா். சில நாள்களுக்கு முன்பு தாயாா் சிறுமியைக் குளிப்பாட்டியபோது அடிவயிற்றில் வலிப்பதாக சிறுமி கூறி கதறி அழுதாராம். மேலும், அதுபற்றி கேட்க, தன்னை மூன்று போ் தனித்தனியாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினாராம். மேலும், வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதாகக் கூறினாா்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா், திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வெடியரசம்பாளையத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் தீபன்ராஜ் (19), அதே பகுதியைச் சோ்ந்த தறித் தொழிலாளி ராஜேந்திரன் (40) ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா். அதே ஊரை சோ்ந்த பெட்ரோல் நிரப்பும் நிலைய மேலாளா் மோகன்குமாா் (29) என்பவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்ட இருவரையும் திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தினா். நீதிபதி சௌம்யா மேத்யூ, இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com