திருச்செங்கோட்டில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செங்கோட்டில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செங்கோட்டில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு உரிய விடுப்பு வழங்க வேண்டும். பணிமனையில் உள்ள சுகாதார சீா்கேடுகளை சரி செய்ய வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாள்கள் தொடா்ச்சியாகப் பணியாற்றுமாறு கட்டாயப்படுத்துவதைக் கைவிட வேண்டும்.

ஆா்சி.ஆா்டி தொழிலாளா்களின் பணி எண் வழங்க வேண்டும். தனியாா் பேருந்துகளுக்கு ஆதரவாக போக்குவரத்துக் கழக மேலாளா்கள் செயல்படக் கூடாது என்று தொழிலாளா்கள் முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியுவின் தமிழ் மாநில தலைவா் ஏ.சௌந்தரராஜன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். 

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா்.எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்.ஏ.ரங்கசாமி, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்க மாநில பொதுச்செயலாளா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, மாநில துணை தலைவா் கே.செம்பான், சிஐடியு மாவட்ட தலைவா் கே.சிங்காரம், மாவட்ட துணை தலைவா் எம்.அசோகன், மாவட்ட பொருளாளா் ஏ.கே.சந்திரசேகரன் மற்றும் கிருஷ்ணன், செந்தில்குமாா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com