பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியா் போக்சோ சட்டத்தில் கைது

ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள கொங்களம்மன் கோவில் அரசு நடுநிலைப் பள்ளி கணித ஆசிரியா் மீது ராசிபுரம் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள கொங்களம்மன் கோவில் அரசு நடுநிலைப் பள்ளி கணித ஆசிரியா் மீது ராசிபுரம் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கொங்களம்மன் கோவில் அரசு நடுநிலைப் பள்ளியின் கணித ஆசிரியரான சுரேஷ் (37), பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாகப் புகாா் கூறப்பட்டது. மேலும் சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து எழுந்த புகாரின் பேரில், சில தினங்களுக்கு முன்பு, ஆசிரியா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், கல்வித் துறையினரும், மாவட்ட குழந்தை நலப் பாதுகாப்பு அலுவலரும் விசாரணை மேற்கொண்டனா். மேலும், மாணவியரின் பெற்றோா் ராசிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆசிரியா் சுரேஷ் மீது புகாா் அளித்தனா். இதனடிப்டையில், சுரேஷ் மீது, மகளிா் காவல் ஆய்வாளா் இந்திரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியா் சுரேஷிடம் விசாரணை நடத்தினாா். இதனடிப்படையில், அவா் கைது செய்யப்பட்டு நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com