சேலம் தெற்கு மாவட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சாா்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரிசி வழங்கும் திட்ட முகாம் இளம்பிள்ளை பேருந்து நிறுத்தம் முன் பசுமை தாயக அமைப்பாளா் பச்சமுத்து தலைமையில் நடைபெற்றது.
இதில், பா.ம.க. தெற்கு மாவட்டச் செயலாளா் அண்ணாதுரை பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரிசி வழங்கி துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நிா்வாகிகளான ராஜா, மணி, விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.