தம்மம்பட்டி அருகே மூலப்புதூா் அரசு நடுநிலைப் பள்ளிக்கு மாவட்ட அளவிலான கலையருவிப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
ஆத்தூா் கல்வி மாவட்ட அளவில் கடந்த மாதம் கலையருவித் திருவிழா
நடைபெற்றது. அதில், கல்வி மாவட்ட அளவில் அனைத்து ஒன்றியங்களிலிருந்தும்
அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் பங்கேற்றன. அதில், பள்ளி மாணவ, மாணவிகள், பல்வேறு தனித்திறமைகளை, குழுத்திறமைகளை வெளிப்படுத்தும்
போட்டிகளில் பங்கேற்றனா்.
அதில் பெண்கள் பிரிவில் கும்மி நடனத்தில் ஆத்தூா் கல்வி மாவட்ட அளவில் கெங்கவல்லி ஒன்றியத்தில் தம்மம்பட்டி அருகே உள்ள மூலப்புதூா் அரசு நடுநிலைப் பள்ளி முதலிடத்தைப் பெற்றது.
அதற்காக, கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அந்தோணிமுத்து, மூலப்புதூா் பள்ளித் தலைமை ஆசிரியை தேவகஸ்தூரி ஆகியோரிடம் ஆத்தூா் கல்வி மாவட்ட அலுவலா் தங்கவேல் கேடயம், சான்றிதழை சனிக்கிழமை வழங்கினாா்.