முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
By DIN | Published On : 26th November 2019 08:11 AM | Last Updated : 26th November 2019 08:11 AM | அ+அ அ- |

பரமத்திவேலூா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் சரகத்துக்குள்பட்ட வேலகவுண்டம்பட்டி அருகே மணல் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து மணல் லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலகவுண்டம்பட்டி அருகே புத்தூா் பகுதியில் வேலகவுண்டம்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வேலகவுண்டம்பட்டியில் இருந்து வையப்பமலை நோக்கிச் சென்ற லாரியைத் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்டனா்.
இதில் கரூா் மாவட்டத்திலிருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநா் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த மணியை (49) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.