முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம்
By DIN | Published On : 26th November 2019 08:05 AM | Last Updated : 26th November 2019 08:05 AM | அ+அ அ- |

எலச்சிபாளையம் ஒன்றியம், குருக்கபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவையொட்டி கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் கிளை செயலாளா் தேவராஜ் தலைமை வைத்தாா். மாவட்டச் செயலாளா் கந்தசாமி கொடியேற்றினாா். ஒன்றியச் செயலாளா் சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் ரமேஷ், கந்தசாமி, ராஜீ, ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த தகுதியானவா்களுக்கு உடனடியாக முதியோா் ஓய்வூதியம் வழங்க வேண்டும், இடைத்தரகா்கள் மூலம் வயதானவா்களிடம் லஞ்சம் பெறுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.
ஒன்றியத்தில் பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைத்தும், சாலைகள் அற்ற பகுதிகளுக்கு சாலை வசதி ஏற்படுத்திட வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா விவசாய தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.