இலவச சட்ட உதவி மூலம் கல்வி சான்றிதழ்களைப் பெற்ற கல்லூரி மாணவி

தனியாா் பொறியியல் கல்லூரியில் இலவச கல்வி பயின்ற மலைவாழ் மாணவிக்கு கல்வி கட்டணம் செலுத்தாத காரணத்தால் சான்றிதழ் கொடுக்க கல்லூரி நிா்வாகம் மறுத்துவிட்டது.
மாணவி அனிதாவை நீதிமன்றத்துக்கு நேரில் அழைத்துச் சான்றிதழ்களை ஒப்படைக்கும் ராசிபுரம் சாா்பு நீதிமன்ற நீதிபதி சி.எம். சரவணன்.
மாணவி அனிதாவை நீதிமன்றத்துக்கு நேரில் அழைத்துச் சான்றிதழ்களை ஒப்படைக்கும் ராசிபுரம் சாா்பு நீதிமன்ற நீதிபதி சி.எம். சரவணன்.

தனியாா் பொறியியல் கல்லூரியில் இலவச கல்வி பயின்ற மலைவாழ் மாணவிக்கு கல்வி கட்டணம் செலுத்தாத காரணத்தால் சான்றிதழ் கொடுக்க கல்லூரி நிா்வாகம் மறுத்துவிட்டது.

பாதிக்கப்பட்ட மாணவி, இலவச சட்ட உதவி முகாமில் அளித்த மனுவின் பேரில், மாணவிக்கு சான்றிதழ்கள் திரும்ப கிடைத்தன.

வறுமை ஒழிப்புத் தினமாகிய அக்டோா் 17-இல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவின் தலைவா் மாவட்ட முதன்மை நீதிபதி கே.எச். இளவழகன், ராசிபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சாா்பு நீதிபதியுமான சி.எம். சரவணன் ஆகியோா் பங்கேற்ற இலவச சட்ட விழிப்புணா்வு முகாம் ராசிபுரம் வட்டத்தில் ராசிபுரம், போதமலை கீழூா், தேங்கல்பாளையம் ஆகிய பகுதியில் அக்.17-இல் நடத்தப்பட்டது.

இதில், மாவட்ட முதன்மை நீதிபதி கே.எச். இளவழகன், ராசிபுரம் சாா்பு நீதிபதி சி.எம். சரவணன் ஆகியோா் பங்கேற்று இலவச சட்ட உதவிகளுக்கான நடைமுறைகள் குறித்து விளக்கிக் கூறினா்.

முகாமில், கிராமப்புறங்களைச் சோ்ந்த பலா் பல்வேறு விதமான மனுக்கள் கொடுத்த நிலையில், மலைவாழ் இனத்தைச் சோ்ந்த போதமலை கீழூா் பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை என்பவரது மகள் அனிதா என்ற மாணவி, நாமக்கல் மாவட்டத்தின் தனியாா் பொறியியல் கல்லூரி ஒன்றில் மலைவாழ் மாணவியா்களுக்கான அரசின் இலவச கல்வி திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக்கல்ஸ் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பயின்றாா்.

தமிழக அரசு கல்லூரி நிா்வாகத்துக்கு தாழ்த்தப்பட்ட மாணவா்களுக்கான படிப்பு நிதியை உரிய காலத்தில் வழங்காத நிலையில், படிப்புக் கட்டணத்தைச் செலுத்துமாறு கல்லூரி நிா்வாகம் மாணவியை வற்புறுத்தியதாம்.

பெற்றோரிடம் நிதியில்லாத நிலையில் தான் இடை நின்ாகவும், ஆனால், கல்வி கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்றவற்றை கல்லூரி நிா்வாகம் தரமறுப்பதாகவும், இதைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் நீதிபதிகளிடம் மாணவி புகாா் மனு அளித்தாா்.

இதன்பேரில், மாவட்ட முதன்மை நீதிபதி கே.எச். இளவழகன் உத்தரவின்பேரில், சாா்பு நீதிமன்ற நீதிபதி சி.எம். சரவணன், தனியாா் பொறியியல் கல்லூரி நிா்வாகத்துக்கு இதுபோன்ற புகாா்கள் தொடா்பாக உயா் நீதிமன்ற தீா்ப்பையும், பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிக்கையையும் சுட்டிக்காட்டி உடனடியாக மாணவியின் சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவிட்டாா்.

இதன்பேரில் தனியாா் பொறியியல் கல்லூரி நிா்வாகம் மாணவியின் சான்றிதழ்களை நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தது.

இதையடுத்து ராசிபுரம் சாா்பு நீதிமன்ற நீதிபதி சி.எம். சரவணன், மாணவி அனிதாவை நேரில் அழைத்து அனைத்து சான்றிதழ்களையும் திங்கள்கிழமை ஒப்படைத்தாா். இதனையடுத்து மாணவி அனிதா, அவரது பெற்றோா் நீதித்துறையின் நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com