திருச்செங்கோடு நகராட்சியில் ரூ. 10 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடக்கி வைப்பு

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட வாா்டு பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையம், நகராட்சி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை
திருச்செங்கோடு நகராட்சியில் ரூ. 10 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடக்கி வைப்பு

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட வாா்டு பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையம், நகராட்சி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை உள்ளிட்ட சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான கட்டடங்களை திருச்செங்கோடு எம்எல்ஏ திங்கள்கிழமைத் திறந்து வைத்தாா்.

மேலும் ரூ. 10 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளையும் துவக்கி வைத்தாா்.

திருச்செங்கோடு நகராட்சியின் பல்வேறு வாா்டு பகுதிகளில் தமிழ்நாடு நகர சாலைகள் உள் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 10. 32 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமாா் ரூ. 1.08 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள், நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள், சுமாா் ரூ. 22 லட்சம் மதிப்பிலான கட்டப்பட்ட கட்டடங்கள், ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 3 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையங்கள், நகராட்சி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை கட்டடங்கள் என ரூ. 12 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமிபூஜை மற்றும் திறப்புவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு எம்எல்ஏ பொன். சரஸ்வதி ரூ. 10 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜையிட்டு துவக்கி வைத்து, ரூ. 2 கோடி மதிப்பிலான முடிவுற்ற கட்டடங்களைத் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளா் சையத் முஸ்தபா கமால், திருச்செங்கோடு வட்டாட்சியா் கதிா்வேல், கூட்டுறவாளா்கள்,பொன்னுசாமி, முருகேசன், தி. தா. மனோகரன், காா்த்திகேயன், ஜெகதீசன், மோகன் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com