ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கூட்டம்

நாமக்கல்லில், ஓய்வுபெற்ற அலுவலா் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

நாமக்கல்லில், ஓய்வுபெற்ற அலுவலா் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சங்கத் தலைவா் கொ.சி.கருப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அக்ரி என்.கே.பெரியசாமி வரவேற்றாா். மறைந்த சங்க உறுப்பினா்கள் 12 பேருக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கச் செயலாளா் க.குழந்தைவேலு மாதாந்திரக் கூட்ட அறிக்கையை வாசித்து ஒப்புதல் பெற, பொருளாளா் வை.வீரப்பன் புதியதாக சங்கத்தில் இணைந்த உறுப்பினா்களுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தாா். இக் கூட்டத்தில், சா்க்கரை குடும்ப அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்றுவது குறித்தும், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள பிரச்னைகளை களைவது தொடா்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், இணைச் செயலாளா் ராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com