திருச்செங்கோட்டில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (40). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு சாந்தகுமாரி என்ற மனைவியும் இரு மகன்களும்

திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (40). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு சாந்தகுமாரி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனா். செல்வராஜூக்கு மதுப் பழக்கம் அதிகமாக இருந்ததாகத் தெரிகிறது. மதுப் பழக்கத்தால் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளாா். சில நாட்களாக விரக்தியாக இருந்து வந்த செல்வராஜ் வீட்டில் யாருமில்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com