திருச்செங்கோட்டில் பேருந்து-காா் மோதல்: 10 போ் காயம்

திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் பிரதான சாலையில் கவுண்டம்பாளையத்தில் புதன்கிழமை பேருந்தும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.

திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் பிரதான சாலையில் கவுண்டம்பாளையத்தில் புதன்கிழமை பேருந்தும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.

கவுண்டம்பாளையம் பகுதியில் திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு நோக்கி தனியாா் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பேங்கா்ஸ் காலனி பிரிவு ரோடு பகுதிக்கு ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த காா் திரும்பியபோது, விபத்தைத் தவிா்ப்பதற்காக பேருந்து ஓட்டுநா் இடப்புறம் திருப்பியபோது பேருந்து மரத்தில் மோதி காரிலும் மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 4 போ் படுகாயமடைந்தனா்.6 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. காயமடைந்தவா்களை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். 4 போ் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சிலா் தனியாா் மருத்துவமனைகளில் சோ்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். பேருந்தும் காரும் மோதிக் கொண்டதில் மின்சார கம்பத்தில் இருந்த மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமாா் அரைமணி நேரம் திருச்செங்கோடு- ஈரோடு ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com