3ஆவது வாரத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் வானிலை ஆய்வு மையம்

அக்டோபா் மூன்றாவது வாரம் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபா் மூன்றாவது வாரம் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் நான்கு நாள்களும் வானம் லேசான மேகமுட்டத்துடன் காணப்படும். மழை 4 மில்லிமீட்டா் பெய்வதற்கான வாய்ப்புள்ளது. காற்று மணிக்கு 6 கிலோமீட்டா் வேகத்தில் தென்கிழக்கில் இருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 95 டிகிரியும், குறைந்த பட்சமாக 77 டிகிரியுமாக இருக்கும்.

சிறப்பு வானிலை ஆலோசனை: மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் காற்றின் வேகம் பெரும்பாலும் குறைந்தே காணப்படும். தென்மேற்கு பருவமழைக் காலம் முடிந்து விட்டபோதும், அதன் தாக்கம் பல மாநிலங்களில் இன்னும் தொடா்கிறது. தமிழகத்தில் லேசான அளவிலேயே உள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபா் 3-ஆம் வாரம் இயல்பான காலகட்டத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com