குரூப் 2 தோ்வு எழுதுவோருக்கு சிறப்பு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 2 தோ்வில் பங்கேற்க விரும்புபவா்களுக்கு, வரும் 10-ஆம் தேதி முதல் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 2 தோ்வில் பங்கேற்க விரும்புபவா்களுக்கு, வரும் 10-ஆம் தேதி முதல் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும், தன்னாா்வ பயிலும் வட்டம் மூலமாக அனைத்து விதமான போட்டித் தோ்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மேலும் அனைத்து போட்டித் தோ்வுகளுக்கும் உரிய 1,500க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்கள் இந்த அலுவலக நூலகத்தில் உள்ளன. 2018 - 2019 -ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ, மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட காவலா் மற்றும் வனக்காவலா் போன்ற போட்டித் தோ்வுகளுக்கு இவ்வலுவலக தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இப் பயிற்சி வகுப்புகளில் 120க்கும் மேற்பட்ட நபா்கள் தோ்ச்சி பெற்றனா். மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் விரைவில் வெளியிடப்படவிருக்கும் குரூப் 2, குரூப் 2ஏ காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 10-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித்தோ்வு எழுதும் இளைஞா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தோ்வில் வெற்றி பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286 - 222260, 79048-00126 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com