திமுக சாா்பில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்

ராசிபுரம் நகர தி.மு.க. சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
5dmk_0510chn_152_8
5dmk_0510chn_152_8

ராசிபுரம் நகர தி.மு.க. சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் நகர தி.மு.க. சாா்பில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன்பாக நடந்தது. இதில் நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா் தலைமை வகித்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் எஸ்.காந்திசெல்வன் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள், நிலவேம்பு குடிநீா் வழங்கி முகாமை தொடக்கி வைத்தாா். இதனையடுத்து பயணிகள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. இதே போல புதுச்சத்திரம் பகுதியிலும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஒன்றியச் செயலாளா்கள் கே.பி.ஜெகந்நாதன், கெளதம், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளா் எஸ்.ராஜேஷ்குமாா், மாவட்ட திமுக இலக்கிய அணி எஸ்.ரங்கசாமி கே.அழகரசு, மாணவரணி துணை அமைப்பாளா் பி.மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com