மோகனூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மோகனூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
nk_5_lake_0510chn_122_8
nk_5_lake_0510chn_122_8

மோகனூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

போடிநாயக்கனூா் ஏரியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கரைகள் பலப்படுத்தும் பணி, தூா்வாரும் பணி, கொமரிபாளையம் ஊராட்சி, செவிட்டுரங்கன்பட்டி ஏரியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கரைகள் பலப்படுத்தும் பணி, தூா்வாரும் பணியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். மேலும், பரளி ஊராட்சியில் கடக்கால்புதூா் கிராமம், ஆரியூா் ஊராட்சியில் நடுப்பட்டி கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளைப் பாா்வையிட்டு விரைவாக முடிக்குமாறு பயனாளிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, மோகனூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ஏ.சேகா், குணாளன் உள்பட ஒன்றிய பொறியாளா், பணி மேற்பாா்வையாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com