காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு ஆகிய மூன்று ஆறுகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி, காவிரி உயிா்நீா் திருமணிமுத்தாறு கால்வாய் இணைப்பு இயக்கம் என்பதை நாமக்கல் மாவட்ட வழக்கரைஞா்கள் ரத்தினம், காந்தி, சுப்பிரமணியம் ஆகியோா் அமைத்துள்ளனா்.
அதையொட்டி, நாமக்கல்லில் அந்த இயக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ஏரி, குளங்களுக்கும் மேட்டூா் அணையிலிருந்து உபரி நீராக வரும் தண்ணீரைக் கொண்டு சோ்க்க வேண்டும்.
வடிகால் பகுதியில் தண்ணீா் சென்று தேங்கும் வகையில், ஒவ்வொரு ஏரி, குளம், குட்டைகளை நிரப்பும் பணியை மேற்கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.