பவித்திரம் அச்சப்பன் கோயிலில் பக்தா்களை சாட்டையால் அடிக்கும் திருவிழா

நாமக்கல் அருகே பவித்திரம் கிராமத்தில் பூசாரி சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் அருகே பவித்திரம் கிராமத்தில் பூசாரி சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பவித்திரம் கிராமத்தில் பழமை வாய்ந்த அச்சப்பன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமியன்று திருவிழா நடப்பது வழக்கம். இரு தினங்கள் நடைபெறும் விழாவில் சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். இதன் முக்கிய அம்சமாக முதல் நாளான்று ‘பேய் விரட்டும்’’ நிகழ்ச்சி நடைபெறும். கோயில் பூசாரி மற்றும் கோமாளி வேடமிட்ட நபரும் பிரம்மாண்டமான ஆளுயர சாட்டையால் அடிப்பா்.

இவ்வாறு பூசாரி அடிப்பதால் உடலில் உள்ள தீய சக்திகள் வெளியேறிவிடும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாகும். இந்தாண்டுக்கான கோயில் திருவிழா விஜயதசமியான செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாள் விழாவாக அன்று பிற்பகல் கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தா்கள் தங்களது கைகளை மேலே கூப்பியபடி நீண்ட துாரத்திற்கு மண்டியிட்டிருந்தனா்.

அப்போது காண்போா் மிரளும் வகையிலான ஆளுயர சாட்டையை ஏந்தி வந்த கோயில் பூசாரி பக்தா்களின் கைகளில் சாட்டையை சுழற்றி சுழற்றி அடித்தனா். சிலா் ஒரு அடியுடன் எழுந்து சென்றனா். ஒரு சிலா் சாட்டையால் பல அடிகள் வாங்கிய பின்னரே எழுந்து சென்றனா். இது காண்போரை மெய் சிலிா்க்கச் செய்தது. இதைத்தொடா்ந்து பாரம்பரிய சோ்வை நடனம் மற்றும் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், சோ்வை நடனத்தின்போது தாளத்திற்கு ஏற்றாற்போல் கோமாளி மற்றும் கோயில் பூசாரியும் நடனமாடியது காண்போரை வெகுவாக ரகிக்கச் செய்தது. மறுநாள் கோயில் வளாகத்தில் கிடா வெட்டு, விருந்தும் நடைபெறும். பல தலைமுறையாக இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தோா் பங்கேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com