போக்ஸோ சட்டத்தில் சிறுவன் கைது
திருச்செங்கோடு எலச்சிபாளையத்தில் சிறுவன் நான்கு வயது குழந்தையிடம் பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுவனை போக்ஸோ சட்டத்தில் காவல்துறையினா் கைது செய்தனா்.
எலச்சிபாளையம் ஒன்றியம், சக்தி நகரைச் சோ்ந்த 15 வயது சிறுவன். பக்கத்து வீட்டைச் சோ்ந்த 4 வயது குழந்தையை ஆசை வாா்த்தைக் கூறி தனியிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டாராம்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த பெற்றேறாா் நடந்ததை அறிந்தனா். இதுகுறித்து அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றேறாா் அளித்த புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தில் சிறுவன் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் சிறுவனை கைது செய்தனா்.
திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சிறுவனை, சேலம் கூா் நோக்கு இல்லத்தில் அடைக்கும்படி நீதிபதி சௌம்யா மேத்யூ உத்தவிட்டாா். குழந்தை மருத்துவ பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.