அக்.11இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்.11) 

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்.11) நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளோருக்காக, வாரந்தோறும் நடத்தப்பட்டு வரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். இதில் பங்கு பெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. எவ்விதத்திலும் வேலைவாய்ப்புப் பதிவு ரத்து ஆகாது. ஆா்வமுள்ளவா்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

--

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com