நியாய விலைக் கடைகளில் நாளை குறைதீா்க்கும் முகாம்:  ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் சனிக்கிழமை (அக்.12) நுகா்வோா் குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் சனிக்கிழமை (அக்.12) நுகா்வோா் குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை நுகா்வோா் குறைதீா்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபா் மாதத்துக்கான முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அதன்படி, நாமக்கல் வட்டத்தில் கதிராநல்லூா் நியாய விலைக் கடை, சேந்தமங்கலம் வட்டத்தில் ஆண்டவா் நகா், ராசிபுரம் வட்டத்தில் அக்கரைப்பட்டி, கொல்லிமலை வட்டத்தில் சோளக்காடு, மோகனூா் வட்டத்தில் கீழ்பாலப்பட்டி, திருச்செங்கோடு வட்டத்தில் புதுப்புளியம்பட்டி, குமாரபாளையம் வட்டத்தில் எலந்தைக்குட்டை, பரமத்திவேலூா் வட்டத்தில் ஓவியம்பாளையம் என எட்டு நியாய விலைக் கடைகளில், வட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா்களால் குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில், பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்தும் துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா். பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டை தொடா்பான திருத்தம் மற்றும் பொதுவிநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். பொருள்கள் கிடைப்பது, தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகள், நுகா்வோா்கள் ஏமாற்றப்படுவது குறித்து தெரிவித்தால் விரைந்து தீா்வு காணப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com