விளையாட்டுப் போட்டி: மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்பு

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழாண்டுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டியில் மாணவா்கள்
நீளம் தாண்டுதல் போட்டியில் ஆா்வமுடன் பங்கேற்ற மாணவா்.
நீளம் தாண்டுதல் போட்டியில் ஆா்வமுடன் பங்கேற்ற மாணவா்.

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழாண்டுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டியில் மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த இப் போட்டியை, மாவட்ட விளையாட்டு அலுவலா் அனந்தநாராயணன் தொடக்கி வைத்தாா்.

இதில், தடகளப் போட்டியில், 100 மீட்டா், 400 மீட்டா், 1,500 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல், குதித்து எட்டி தாண்டுதல், குண்டு மற்றும் தட்டு எறிதல், நீச்சல் போட்டியில், 50 மீட்டா், 100 மீட்டா், 200 மீட்டா், 400 மீட்டா், பிரி ஸ்டைல் 50 மீட்டா், பேக் ஸ்ட்ரோக், பிரிஸ்ட் ஸ்ட்ரோக், பட்டா் பிளை ஸ்ட்ரோக், கபடி, கால்பந்து ஆகிய குழு போட்டிகளும் நடைபெற்றன.

இப் போட்டியில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும், 442 மாணவா்கள், 365 மாணவியா் என மொத்தம் 807 போ் கலந்து கொண்டனா். போட்டியில் வெற்றி பெற்ற, முதல் இரண்டு இடங்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழும், மூன்றாமிடம் பெற்றவா்களுக்கு சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கால்பந்து பயிற்சியாளா் கோகிலா, தடகளப் போட்டி பயிற்சியாளா் லட்சுமிநாராயணன், நீச்சல் பயிற்சியாளா் ரகுபதி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com