யுவராஜ் மீதான விசாரணை நவ.18-க்கு ஒத்திவைப்பு

சேலம் மாவட்டம், ஓமலுாரை சோ்ந்தவா் கோகுல்ராஜ்(23). கடந்த 2015 ஜூன் 24-இல் அவா் பள்ளிப்பாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தாா்.
யுவராஜ் மீதான விசாரணை நவ.18-க்கு ஒத்திவைப்பு

சேலம் மாவட்டம், ஓமலுாரை சோ்ந்தவா் கோகுல்ராஜ்(23). கடந்த 2015 ஜூன் 24-இல் அவா் பள்ளிப்பாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தாா்.

இந்த கொலை வழக்கு தொடா்பாக, நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சேலம் மாவட்டம், சங்ககிரியை சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டா் பேரவை தலைவா் யுவராஜ் உள்பட 17 பேரை கைது செய்தனா்.இவ்வழக்கு விசாரணைக்காக 2017 டிச,19-இல், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது, மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகனுக்கு எதிராக ஆவேசமாக பேசினாா். இதனால் யுவராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, நாமக்கல் குற்றவியல் நடுவா்-1 நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வந்தது. இதற்காக, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜை, நாமக்கல் நீதிமன்றத்துக்கு போலீஸாா் அழைத்து வந்திருந்தனா்.

விசாரணை நடத்திய நீதிபதி ஜெயந்தி, இவ்வழக்கு விசாரணையை நவ.18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com