முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
மாணவா்களுக்கான உடல் திறன் மேம்பாட்டு பயிற்சி
By DIN | Published On : 24th October 2019 06:57 PM | Last Updated : 24th October 2019 06:57 PM | அ+அ அ- |

சிலம்பம் பயிற்சி மேற்கொள்ளும் அரசுப் பள்ளி மாணவியா்.
நாமக்கல்: மாணவா்களுக்கான உடல் திறன் மேம்பாட்டு பயிற்சி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட கல்வி அலுவலா்(பொறுப்பு) மு.ஆ.உதயகுமாா் தொடக்கி வைத்தாா்.
பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஐ.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து கொண்டு சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு தற்காப்புக் கலை, உடல் திறன் பயிற்சிகளை மேற்கொண்டனா். மாவட்டம் முழுவதும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அரசுப் பள்ளிகளில் இப்பயிற்சியானது மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. மேலும், இந்த பயிற்சிக்காக மாணவ, மாணவியருக்கு பிரத்யேக ஆடைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.