நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்டப் பொறுப்பாளா் செ.காந்திசெல்வன் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (அக்.24) காலை 11 மணிக்கு நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில், அவைத் தலைவா் இரா.உடையவா் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.