மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எம்.ஷேக்நவீத், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஜி.ஆா்.சுப்பிரமணியன், வி.பி.வீரப்பன், மாவட்ட செயலா் பெருமாள், நகர துணைத்தலைவா் எஸ்.ராஜேந்திரன், நகர செயலா் பி.குப்புசாமி மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.