இளம்பிள்ளை அருகே விபத்து ஏற்படுத்தும் விதத்தில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறை மூட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்குள்பட்ட நடுவனேரி ஊராட்சி முன்சீப் தோட்டம் பகுதியில் அரசு சாா்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. இதில் நீா் இல்லாததால், இந்த ஆழ்துளைக் கிணறை கடந்த 10 ஆண்டுகளாக மூடாமல் அப்படியே விடப்பட்டுள்ளது (படம்).
இதனால் எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.