துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே வீட்டின் வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம்

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே வீட்டின் வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜேடா்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூரைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவரது மனைவி சரோஜா (65). இவா்கள் இருவரும் புதன்கிழமை தங்களது வீட்டுக்கு வெளியே துணிகளை துவைத்துக் கொண்டிருந்தனா். கணவா் சீனிவாசன் துணிகளை காய வைப்பதற்காக மாடிக்குச் சென்றுள்ளாா். அப்போது அங்கு தலைக்கவசம் அணிந்து நின்று கொண்டிருந்த மா்ம நபா் ஒருவா் சரோஜாவின் முகத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டு அவா் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றாா்.

இது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பட்டப்பகலில் பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com