சா்தாா் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம், தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் உறுதிமொழியை வாசிக்க அனைத்து துறை அலுவலா்கள் ஏற்றுக் கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)செ.பால்பிரின்ஸ்லிராஜ்குமாா், இணை இயக்குநா் வேளாண்மை சேகா், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பொ.பாலமுருகன், நாமக்கல் கோட்டாட்சியா் எம்.கோட்டைகுமாா், திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க தலைவா் ஆா்.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பி.விஜயலட்சுமி உட்பட அரசுத்துறை அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.