சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

பரமத்திவேலுôர் மற்றும் சுற்றுவட்டார பகுதி சிவன் கோயில்களில் புதன்கிழமை வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஷ்வரர் மற்றும் சிவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பரமத்திவேலுôர் மற்றும் சுற்றுவட்டார பகுதி சிவன் கோயில்களில் புதன்கிழமை வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஷ்வரர் மற்றும் சிவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
 பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், பழைய காசி விஸ்வநாதர் கோயில்கள், வடகரையாத்தூர் லிங்கேஸ்வரர் கோயில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோயில், பேட்டை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், மாவுரெட்டி பீமேஸ்வரர் கோயில், பில்லூர் வீரட்டீஸ்வரர் கோயில் மற்றும் வேலூர் எல்லையம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஷ்வரர் மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெற்றன. இதில் நன்செய் இடையாறு திருவேலீஸ்வர், நந்திகேஷ்வரருக்கு சிறப்புஅலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com