சட்டப்பேரவைக் குழு நாமக்கல் வருகை: மனுக்கள் அனுப்ப ஆட்சியர் வேண்டுகோள்

நாமக்கல் மாவட்டத்துக்கு, சட்டப்பேரவை மனுக்கள் குழு விரைவில் வருகை தரவுள்ளதாக  மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்துக்கு, சட்டப்பேரவை மனுக்கள் குழு விரைவில் வருகை தரவுள்ளதாக  மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது: 
தமிழ்நாடு சட்டப்பேரவையின், 2018  - 2020 ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு நாமக்கல் மாவட்டத்துக்கு விரைவில் வருகை தர உள்ளது. அதனையொட்டி, நாமக்கல் மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள தனிப்பட்ட நபர்,  சங்கங்கள் அல்லது நிறுவனங்கள் தீர்க்கப்படவேண்டிய பொது பிரச்னைகள் மற்றும் குறைகள் குறித்த மனுக்களை  (5 நகல்கள் தமிழில் மட்டும்) சம்பந்தப்பட்ட மனுதாரர்கள், தேதியுடன் கையொப்பமிட்டு,  தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை- 600 009 என்ற முகவரிக்கு அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்னைகள் குறித்த மனுக்களாக இருக்கலாம். 
மனுக்கள் ஒரே ஒரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 
தனிநபர் குறை, நீதிமன்றத்திற்கு முன் வழக்கில் உள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன் அல்லது தொழில் கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுதல் ஆகியவற்றை குறிப்பதாக மனுக்கள் இருத்தல் கூடாது.  சட்டப்பேரவை விதிகளின் வரம்பிற்குள்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு நாமக்கல் மாவட்டத்துக்கு வரும் போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும்.
ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனுவை மட்டுமே குழுவினால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.  அந்த வேளையில் மனுதாரர் முன்னிலையில் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம்
கேட்டறியப்படும். 
இதுகுறித்து மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். 18-ஆம் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com