நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 3 காசுகள் உயர்ந்து ரூ.3.94-ஆக ஞாயிற்றுக்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல முட்டை விலை நிர்ணயக் கூட்டத்தில், திங்கள்கிழமைக்கான முட்டை விலையை நிர்ணயம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்திருப்பதால், விலையில் மாற்றம் செய்யலாம் என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, முட்டை விலையை 3 காசுகள் உயர்த்தி ரூ.3.94-ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.